17 10
இலங்கைசெய்திகள்

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

Share

இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் செயலிழந்த மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் இன்று மீள செயல்படத் தொடங்கியுள்ளதுடன் பொறியாளர்களின் கண்காணிப்பில் இயந்திரங்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறித்த இயந்திரங்களின் செயற்பாட்டின் அடிப்படையில் இன்றைய தினம் (14) மின்வெட்டு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பாணந்துரை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட அவசர நிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் படிப்படியாக மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்தது.

இந்த நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...