3 26
இலங்கைசெய்திகள்

குரங்குகள் மீது சுமத்தப்படும் தொடர் குற்றச்சாட்டுகள்! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

Share

குரங்குகள் மீது சுமத்தப்படும் தொடர் குற்றச்சாட்டுகள்! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,”கடந்த அரசாங்கத்தில் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் காணப்பட்டன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீன விஜயத்தின் போது இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம்.

அதனால் தான் நாட்டிலுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் குரங்குகள் மீது பழிசுமத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

இவர்களுக்கு சிறந்த அரசியலில் ஈடுபட முடியும். ஆனால் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆட்சி நினைத்ததைப் போல அன்றி, மிகவும் கடினமாகவுள்ளதாக ஜே.வி.பி.யினர் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை மின்சாரத்துக்கான கேள்வி மற்றும் விநியோகத்தில் காணப்படும் சிக்கலே இதற்கான காரணமாகும். நுரைச்சோலையில் மின் பிறப்பாக்கிகள் 3 செயலிழந்துள்ளமையால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் 900 மெகாவோல்ட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது

அவ்வாறெனில் அரசாங்கம் முதலில் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டும். மின் சக்தி அமைச்சர் பொறியியலாளர் எனக் கூறுவது நகைச்சுவையாகவுள்ளது.

இவ்வாறு சமநிலையற்ற தன்மை தொடர்பில் மின்சாரசபை பொறியியலாளர்களால் முன்னரே அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரால் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.”என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...