6 26
இலங்கைசெய்திகள்

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவு : புடினுடன் அடுத்தக்கட்டத்தை நோக்கி ட்ரம்ப்

Share

உக்ரைன் – ரஷ்ய போர் முடிவு : புடினுடன் அடுத்தக்கட்டத்தை நோக்கி ட்ரம்ப்

உக்ரைனில் (Ukraine) போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவது குறித்து ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்கள் அமைப்புகள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை (Volodymyr Zelenskyy) அழைத்து பேச்சுவார்த்தை தொடர்பில் தகவல் தெரிவிப்பதன் மூலம் முறைப்படி தொடங்க இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்

புடினும் ட்ரம்பும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தொலைபேசியில் பேசியதாகவும் இருவரும் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் உறுதி செய்துள்ளது.

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதாக ட்ரம்ப் நீண்ட காலமாக தெரிவித்த வருகின்ற நிலையில், இதை எப்படிச் சாதிப்பார் என்பது தொடர்பில் அவர் கருத்து வெளியிடவில்லை.

இந்தநிலையில், ட்ரம்பின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

2014 இற்கு முந்தைய உக்ரைனின் எல்லைகளைத் திரும்பப்பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, கிரிமியா பிராந்தியத்தை ரஷ்யா கைப்பற்றியதை இனி உக்ரைன் சொந்தம் கொண்டாட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் அந்தஸ்தை அளிப்பது போருக்கான தீர்வாக அமெரிக்க நிர்வாகம் கருதவில்லை என்ற தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...