14 15
இலங்கைசெய்திகள்

நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் : வெளியான காரணம்

Share

நூறுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் : வெளியான காரணம்

அரசியல் காரணங்களுக்காக அன்றி நீண்ட காலமாக காவல்துறை பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படாமையாலேயே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே புத்திக மனதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”சில காலங்களாகவே இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தது. மூன்று வருடங்களாக இடமாற்றம் செய்யப்படவில்லை.

இதில் எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் சில அதிகாரிகளை சாதாரண பணிகளுக்கு நியமித்துள்ளோம். சில அதிகாரிகளுக்கு நல்ல பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் அரசியல் இருப்பதாக யாரும் சொல்ல முடியாது.

இந்த இடமாற்றங்களின் செயல்திறனை ஒரு வருடத்திற்கு நாங்கள் கண்காணிப்போம். பொறுப்பதிகாரிகள் அங்கே சும்மா உட்கார முடியாது. வேலை செய்ய வேண்டும்.

இந்த இடமாற்றங்கள் குறித்து காவல்துறை ஆணைக்குழுவும் (National Police Commission) எங்களிடம் பலமுறை கேட்டதற்கமைய அவர்களின் ஒப்புதலுடன் இது செய்யப்பட்டது.” என தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான காவல்துறைஅதிகாரிகள் குழு நேற்று (11) இரவு ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட 139 காவல்துறை அதிகாரிகளில் 104 பிரதான காவல்துறை பரிசோதகர்களும், 35 காவல்துறை பரிசோதகர்களும் அடங்குகின்றனர். இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 மற்றும் 18 ஆம் திகதிகளில் இருந்து நடைமுறைக்கு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, காவல்துறை பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றிய 51 அதிகாரிகள் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் தலைமையக காவல்துறை பரிசோதகர்களாக பணியாற்றிய அதிகாரிகளும் சாதாரண பணிகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 18 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முடங்கும் சுகாதாரத் துறை? – தரவுகளைப் புறக்கணிக்க மருத்துவர்கள் சங்கம் முடிவு; நாளை முதல் போராட்டம் தீவிரம்!

தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய எழுத்துப்பூர்வ உடன்படிக்கைகளை மீறியுள்ளதாகக் கூறி, நாளை (18) முதல்...

image 1200x800 19
செய்திகள்இலங்கை

சபரிமலை வழக்கு: ஏப்ரல் 7 முதல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை! – சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்ற 2018-ஆம் ஆண்டின் தீர்ப்பை எதிர்த்துத்...

image 1200x800 31
செய்திகள்உலகம்

பிரித்தானியாவின் புதிய பயண விதிகளால் பெண்களுக்குச் சிக்கல்! – பெயர்ப் பொருத்தமின்மை பாரபட்சமாக அமைவதாகக் குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் புதிய எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் எதிர்வரும் பிப்ரவரி 25 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளன....

image 1200x800 17 1
செய்திகள்உலகம்

விண்ணில் தோன்றும் நெருப்பு வளையம்! – 2026-இன் முதல் சூரிய கிரகணம் இன்று; எங்கே காணலாம்?

2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (17) செவ்வாய்க்கிழமை நிகழ்கிறது. இது ஒரு ‘வளைய...