12 15
உலகம்செய்திகள்

செயற்கை நுண்ணறிவு வேலை பறிக்குமா? AI-யால் யாருக்கு பாதிப்பில்லை? பில்கேட்ஸ் கருத்து

Share

செயற்கை நுண்ணறிவு வேலை பறிக்குமா? AI-யால் யாருக்கு பாதிப்பில்லை? பில்கேட்ஸ் கருத்து

காலம் மாறினாலும், தொழில்நுட்பம் எவ்வளவு தான் வளர்ந்தாலும், வேலைவாய்ப்புகளைப் பற்றிய பயம் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வேகமாக வளர்ந்து வரும் இன்றைய சூழலில், பலரது மனதில் “இது நம்ம வேலைய பறிச்சிடுமோ?” என்ற கவலை எழுந்து இருப்பது நியாயமானதுதான்.

இந்நிலையில், சில பிரபலங்களின் கருத்துக்கள் இந்தப் பயத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.

ஆனால் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அடுத்த மூன்று வருடங்களில் சில துறைகளில் செயற்கை நுண்ணறிவால் மனிதர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்க முடியாது என்பது குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

பலர் செயற்கை நுண்ணறிவால் கோடிங் செய்ய முடியும் என்று நினைத்தாலும், பில்கேட்ஸ் வேறு கருத்தை முன்வைக்கிறார்.

செயற்கை நுண்ணறிவால் முழுமையாக கோடிங் செய்ய முடியாது, அப்படி செய்தாலும் அதில் தவறுகள் இருக்கும் என்கிறார்.

அந்தத் தவறுகளை சரி செய்ய மனிதர்கள் தேவை. எனவே, கோடர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய பயம் தேவையில்லை.

இத்துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு தேவைகள் உள்ளன. இதனால், செயற்கை நுண்ணறிவால் எல்லாவற்றையும் கையாள முடியாது.

இத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு போதுமான நிதி கிடைப்பதில்லை.

மேலும், மரபணு தொடர்பான ஆராய்ச்சிகளை மனிதர்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

எனவே, இத்துறையில் இருப்பவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவால் எந்த அச்சுறுத்தலும் இல்லை.

செயற்கை நுண்ணறிவால் என்ன வேலைகளைச் செய்ய முடியாது என்பதை அறிய, செயற்கை நுண்ணறிவிடமே கேட்டோம்.

அதற்கு அது, மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய வேலைகளைத் தன்னால் செய்ய முடியாது என்று கூறியது.

குறிப்பாக, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் பணிகளை எந்த செயற்கை நுண்ணறிவாலும் செய்ய முடியாது என்று அதுவே ஒத்துக்கொண்டது.

 

Share
தொடர்புடையது
10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...

09 5
செய்திகள்விளையாட்டு

ஈரான் பதற்றம் எதிரொலி: டி20 உலகக் கோப்பைக்காக ஐசிசி அவசரகாலத் திட்டங்களைச் செயல்படுத்தியது!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஐசிசி உறுப்பு...

08 4
செய்திகள்உலகம்

பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கத் தூதரகம் குடிமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

ஈரானிலிருந்து பஹ்ரைன் மீது ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில்,...

07 3
செய்திகள்இலங்கை

அரச ஊழியர்களுக்கான சொத்துக் கடன் எல்லை 50 இலட்சமாக அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய, அரச உத்தியோகத்தர்களுக்கான சொத்துக் கடன் எல்லையை...