8 25
இலங்கைசெய்திகள்

குரங்குகளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் முயற்சி தோல்வி!

Share

குரங்குகளுக்கு குடும்ப கட்டுபாடு செய்யும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயிர்ச் செய்கைகளுக்கு குரங்குகளினால் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை தடுக்க குடும்ப கட்டுபாடு செய்யும் திட்டமொன்று பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

மாத்தளை மாவட்டம் ஹரஸ்கம பிரதேசத்தில் இந்த பரீட்சார்த்த திட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், இந்த பரீட்சார்த்த திட்டம் தற்பொழுது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான மிருக வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு மற்றும் கிரிதலே மிருக வைத்திய சிகிச்சை நிலையத்திற்கு குரங்குகளை போக்குவரத்து செய்வதில் ஏற்படும் அதிக செலவு போன்ற காரணிகளினால் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் இணைப்புக் குழுவின் தலைவர், பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான சாதனங்களுக்காக மட்டும் 12 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...