உலகம்செய்திகள்

மெக்சிகோ வளைகுடாவை தனதாக்கிய அமெரிக்கா!

Share
4 18
Share

மெக்சிகோ வளைகுடாவை தனதாக்கிய அமெரிக்கா!

மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடாவாக பெயரிடும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ விமானம் அமெரிக்க வளைகுடாவின் மீது பறந்தபோது இதில் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெறவுள்ள கால்பந்து தொடரை பார்க்க புளோரிடாவிலிருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு, உத்தியோகப்பூர்வ விமானத்தில் பயணித்தபோதே நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோ வளைகுடாவின் பெயரை மாற்றப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தற்போது அதற்கான உத்தரவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க நிறைவேற்று ஆணை 14172-ன் ஒரு பகுதியான ‘அமெரிக்காவின் பெருமையை மதிக்கும் பெயர்களை மீட்டெடுத்தல்‘ என்ற தலைப்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவில், மெக்சிகோ வளைகுடா என முன்னர் அறிவிக்கப்பட்ட பகுதி நீண்ட காலமாக வளர்ந்து வரும் நமது தேசத்தின் ஒருங்கிணைந்த சொத்தாக இருந்து, அமெரிக்காவின் அழியாக பகுதியாக இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...