7 17
இலங்கைசெய்திகள்

பூமிக்கு அதிகரித்த அபாயம்: ஏழே வருடங்களில் நெருங்கும் பேரழிவு

Share

பூமிக்கு அதிகரித்த அபாயம்: ஏழே வருடங்களில் நெருங்கும் பேரழிவு

சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்கும் அபாயம் சற்று அதிகரித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

கூடுதல் அவதானிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் மூலம் குறித்த சிறுகோள், டிசம்பர் 22, 2032 அன்று பூமியுடன் அதன் மோதல் நிகழ்தகவு 2.3% ஆக அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு, அவதானிப்புகள் ஏப்ரல் வரையிலும் சிறுகோள் இன்னும் தெரியும் வரை தொடரும் எனவும் 2028 ஜூன் வரை கவனிக்க முடியாத அளவுக்கு மங்கலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறுகோள் 2024 டிசம்பரில் சிலியில் அமைந்துள்ள வளிமண்டல தாக்க ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு (ATLAS) தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுகோளின் அளவை சிறப்பாக மதிப்பிடுவதற்காக 2025 மார்ச் மாதம் வரை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது அதன் அளவு 130-300 அடி அகலம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவுமு் கூறப்படுகிறது.

இந்ந நிலையில், நாசாவின் NEO ஆய்வுகள் மையத்தின் (CNEOS) தகவலின் படி, இது 2032 டிசம்பர் 22 அன்று சுமார் 66,000 மைல் வேகத்தில் பூமியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...