8 18
இலங்கைசெய்திகள்

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

Share

சிறிலங்கா காவல்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த கான்ஸ்டபிள்!

கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் T-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உத்தியோகத்தர் பெப்ரவரி 08 ஆம் திகதி இரவு பணிக்குச் சென்றபோது, துப்பாக்கியையும் தோட்டாங்களையும் எடுத்து சென்றதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், அவர் பணிக்கு சமூகமளிக்கவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை எனவும் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில் சந்தேகநபரான உத்தியோகத்தர், அன்றிரவே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றிருப்பது தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த அதிகாரியை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயற்பட்டுவருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி இன்னும் மீட்கப்படாத நிலையில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...