3 13
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூர் மாதிரியை இலங்கை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என பிரதமர் தெரிவிப்பு

Share

சிங்கப்பூர் மாதிரியை இலங்கை ஏற்றுக்கொள்ள சிறிது காலம் எடுக்கும் என பிரதமர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படும் சிங்கப்பூர் மாதிரியை  இலங்கை ஏற்றுக்கொள்ளவும், அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்றவும் சிறிது நேரம் எடுக்கும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

ஆளும் தேசிய மக்கள் சக்தி, அமைச்சர் பதவிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் இந்த கருத்தை பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ஒழிப்பதற்கான தனிநபர் தீர்மானத்தை இன்று(7) மன்றில் முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இலங்கை சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

அரசியலை ஒரு கவர்ச்சிகரமான தொழிலாக மாற்ற சிங்கப்பூர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதிக சம்பளம் வழங்குகிறது.

மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவும் அதே மாதிரியைப் பின்பற்றுகின்றன. எனவே இலங்கையும் அதையே பின்பற்ற வேண்டும்.

இந்தத் தலைமுறையில் இலங்கை அதைச் செய்ய வேண்டும். அர்ப்பணிப்பின் மூலம் அதனை செய்ய முடியும் என்று ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) குறிப்பிட்டார்.

இருப்பினும், இந்த பிரேரணைக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை சிங்கப்பூர் மாதிரியை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாசாரத்தை மாற்றுவதே தற்போதைய பணியாக இருப்பதால், 12 அல்லது 13வது நாடாளுமன்றத்தில் மட்டுமே, ரவி கருணாநாயக்கவின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...