13 7
உலகம்செய்திகள்

உலகின் அழிவுக்கு காரணமாக இருக்கப்போகும் மூன்று விடயங்கள்: புதிய வைரஸ் உருவாக்கியுள்ள அச்சம்

Share

கொரோனாவைரஸைப்போல், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு புதிய வைரஸால், அடுத்த கொள்ளை நோய் உருவாகும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

என்னப் பொருத்தவரை மூன்று விடயங்கள் உலகை அச்சுறுத்துபவையாக, அதாவது, உலகின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் என நம்புகிறேன் என்கிறார் குயின்ஸ்லாந்து பல்கலை ஆய்வாளரான Dr Rhys Parry.

அவை, ஒன்று அணு ஆயுதப்போர், அடுத்தது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், மூன்றாவது, உலகை பாதிக்கவிருக்கும் ஒரு கொள்ளை நோய் என்கிறார் Dr Parry.

இப்போது, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் சிலர், அமெரிக்காவில் இதுவரை இல்லாத புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

அதன் பெயர் கேம்ப் ஹில் வைரஸ் அல்லது CHV (Camp Hill virus). சமீபத்தில் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிபா வைரஸ் மற்றும் ஹேண்ட்ரா வைரஸ் ஆகியவற்றின் குடும்பமான ஹெனிப்பா வைரஸ் (henipavirus) குடும்பத்தைச் சேர்ந்தது இந்த கேம்ப் ஹில் வைரஸ்.

இந்த ஹெனிப்பா வைரஸ்களால் உயிரிழக்கும் அபாயம் அதிகமாகும்.

ஆகவே, அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அது கொரோனாவைரஸைப்போல எதிர்காலத்தில் ஒரு கொள்ளை நோயை உருவாக்கலாம் என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர் அல்லது மலம் மூலம் அது மனிதர்களுக்கும் பரவக்கூடும்.

இந்த வைரஸும் மரபணு மாற்றம் பெற்று மனிதர்களுக்கு பரவக்கூடும் என்கிறார் Dr David Dyjack என்னும் அறிவியலாளர்.

இந்த கேம்ப் ஹில் வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அவருக்கு தண்டுவடம் மற்றும் மூளை பாதிப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சேதம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

தற்போது அமெரிக்காவில் இந்த கேம்ப் ஹில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...