13 5
உலகம்செய்திகள்

எதிர்பார்த்ததுபோலவே மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்: பிரான்ஸ் அரசு தப்புமா?

Share

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்ததிலிருந்தே பிரான்ஸ் அரசியலில் பரபரப்பான சூழல்தான் நிலவிவருகிறது.

ஒரே ஆண்டில் நான்கு பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகி, முந்தைய பிரதமரான மிஷெல் பார்னியேர், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினர் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தார்கள்.

அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்ததால் பதவியிழக்க நேர்ந்தது.

இந்நிலையில், புதிய பிரதமரான ஃப்ரான்கோயிஸும், சிறப்பு அரசியல் சாசன அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

ஆகவே, முந்தைய பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போலவே தற்போது ஃப்ரான்கோயிஸ் அரசு மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால், பிரான்ஸ் அரசு தப்புமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

நல்லவேளையாக, பிரான்சின் வலதுசாரி National Rally கட்சி, தாங்கள் நம்பிக்கையில்லாத் தீரமானத்தை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

ஆகவே, பிரதமர் தலை தப்பும், ஆட்சி கவிழாது என எதிர்பார்க்கப்படுகிறது.

விடயம் என்னவென்றால், பட்ஜெட் நிறைவேறாததால் ஏற்பட்டுள்ள நிலையில்லாத்தன்மையால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சுமார் 12 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஆகவே, இம்முறையும் பட்ஜெட் நிறைவேறவில்லையென்றால், அதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...