5 6
இலங்கைசெய்திகள்

தமிழர்பகுதியில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத மதகுருமார்

Share

வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்படும் போதும், தேசிய கீதம் இசைக்கப்படும் போதும் மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற சுதந்திர நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா (Anura Kumara Dissanayake) பதவியேற்பு நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த மதகுரு உட்பட அனைத்து மதகுருமாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் தேசிய கொடி ஏற்றும் போதும், தேசிய கீதம் இசைக்கும் போதும் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தமது இடத்திலேயே அமர்ந்திருந்து அதனை பார்வையிட்டுக் கொண்டிந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...