6 4
இலங்கைசெய்திகள்

நாட்டில் 68 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

Share

வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,” கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) துபாயில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எமக்கு அறிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கைத்துப்பாக்கி, 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்கப்பட்டிருந்தது.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Cabinet Decisions Driving License Renewel
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர கால நீடிப்பு: வர்த்தமானியை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

கடந்த 2025 ஆம் ஆண்டு இறுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க...

c8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அதிரடி முடிவு!

இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களின் உரிமைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்தவும்...

chinas xi says india china are friends partners
செய்திகள்இந்தியா

இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...

US Embassy relief
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டித்வா சூறாவளி நிவாரணம்: சிறு மற்றும் நுண் வர்த்தகர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை நேரடி நிதியுதவி – அரசாங்கம் அதிரடி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு...