16
இலங்கைசெய்திகள்

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை: 11 பேருக்கு மரண தண்டனை

Share

20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை: 11 பேருக்கு மரண தண்டனை

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட பதினொரு பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஊவா மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் 11 பேரும், 2004 மே 29 ஆம் திகதியன்று, ஊவா பரணகமவில் உள்ள கலஹகமவைச் சேர்ந்த வாதுவ பொன்சுகே பந்துல ஜெயவர்தன திசேரா என்ற 23 வயதான இளைஞரை அடித்துக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

முன்னதாக சட்டமா அதிபர் 13 பேர் மீது குற்றம் சுமத்தியிருந்தார் எனினும், முதல் பிரதிவாதி சேனக ரஞ்சித் பிரேமரத்ன, குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஏழாவது பிரதிவாதியான ஆர்.பி.கே. பத்திரன மேல் நீதிமன்ற விசாரணையின் போதே இறந்துவிட்டார், பன்னிரெண்டாவது பிரதிவாதியும்; வெளிநாட்டுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு சாட்சியத்தின்படி, முதல் குற்றவாளிக்கும், கொலை செய்யப்பட்டவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த தனிப்பட்ட பிரச்சினையே மரணத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்தநிலையிலேயே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...