7 56
இலங்கைசெய்திகள்

தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு

Share

தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு தற்போது தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுவதை அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளை வெட்டுவதற்கு அரசியலமைப்பு தடையாக இருப்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியாது என குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...