23 8
இந்தியாஉலகம்செய்திகள்

விசா, பணி அனுமதி பெறுவதை எளிமையாக்கும் பிரான்ஸ்: இந்தியர்களை ஈர்க்க திட்டம்

Share

இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள Sciences Po நிறுவனத்தில் புதிய இயக்குநரான Luis Vassy, சமீபத்தில் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, தங்கள் நாட்டில் விசா பிரச்சினை எல்லாம் கிடையாது, ஆகவே தங்கள் நாட்டுக்கு வரலாம் என சர்வதேச மாணவர்களை வரவேற்றது நினைவிருக்கலாம்.

இந்திய மாணவர்களை பிரான்சுக்கு கல்வி கற்க வரவேற்ற Vassy, தங்கள் பல்கலையில் பயிலும் மாணவர்களில் பாதிபேர் வெளிநாட்டவர்கள்தான் என்றும், பல்கலையில் ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

கனடா அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச மாணவர்களுக்கு கெடுபிடி ஏற்படுத்துகின்றன, எங்கள் நாட்டில் அந்த பிரச்சினை எல்லாம் கிடையாது. அதனால், சர்வதேச மாணவர்கள் வந்து எங்கள் நாட்டில் கல்வி கற்கலாம் என்றும் கூறியிருந்தார் Vassy.

இந்நிலையில், பிரான்சிலுள்ள Lyon நகரத்தில் அமைந்துள்ள Emlyon Business School என்னும் கல்வி நிறுவனத்தின் தலைவரான இசபெல் (Isabelle Huault) என்பவரும், இந்திய மாணவர்களை ஈர்க்கும் நோக்கில், விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று தற்போது கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள், கனடாவுடனான தூதரக உறவில் பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்திய மாணவர்களை ஈர்ப்பதற்காக, விசா மற்றும் பணி தொடர்பான அனுமதிகள் பெறுவதை பிரான்ஸ் எளிமையாக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...