15 35
உலகம்செய்திகள்

விசா விதிகளை தளர்த்தி… சுற்றுலாப் பயணிகள் வேலை பார்க்கலாம் என அனுமதித்த நாடு

Share

சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தரும் போது, அவர்களின் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க அனுமதிக்கும் வகையில் புதிய விசா விதிகளை நியூசிலாந்து அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனால் சுற்றுலாத்துறையும் பொருளாதாரமும் வளர்ச்சி காணும் என்றே நியூசிலாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நியூசிலாந்தில் பயணம் செய்யும் போது மக்கள் வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் ஜனவரி 27 முதல் பார்வையாளர் விசா விதிகள் மாறும் என்று குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் எங்கள் நாட்டைப் பார்வையிடவும், வேலை செய்யவும் ஏற்ற இடமாகக் காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எத்தனை பேர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இங்கு வேலை செய்யவும் பயணம் செய்யவும் விரும்பும் மக்களை நியூசிலாந்து குறிவைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் இந்த புதிய விசா விதிகளின் அடிப்படையில், நியூசிலாந்தில் பயணம் மேற்கொள்பவர்கள், தங்களின் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணியாற்றலாம்.

ஆனால் நியூசிலாந்து நிறுவனத்திற்காக பணியாற்ற முடியாது. 92 நாட்களுக்கு மேல் பணியாற்றும் நபர்களிடம் வரி வசூலிக்கப்படும். நியூசிலாந்து சுற்றுலாவால் ஆண்டுக்கு 11 பில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறது.

அத்துடன் நியூசிலாந்து மக்களுக்கு 200,000 வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நியூசிலாந்தின் பொருளாதாரம் தொழில்நுட்ப ரீதியாக மந்தநிலைக்குள் நுழைந்தது என்றே கூறப்படுகிறது.

மேலும் சர்வதேச பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விடக் குறைவாக உள்ளதாகவே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...