12 39
இந்தியாசெய்திகள்

7வது முறையாக நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும்- முதல்வர் மு. க. ஸ்டாலின்

Share

7வது முறையாக நிச்சயமாக திமுக தான் ஆட்சி அமைக்கும்- முதல்வர் மு. க. ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3000க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அப்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆளுநர், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜயை விமர்சித்த உரையாற்றினார்.

பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்துள்ளீர்கள்.

பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள்.

திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம்.

1949ல் திமுக தொடங்கப்பட்ட நிலையில் 1957ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க.

1957ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962ல் 50க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது திமுக.

ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் திமுக தொடங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம்.

தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை.

திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது.

மதத்தை மையமாக வைத்து பேசும் ஆளுநரால் திமுக மேலும் வளருகிறது. திமுகவுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

7வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன் என்று அவர் கூறினார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...