15 30
உலகம்செய்திகள்

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் கடல் பகுதியில் ரஷ்ய உளவு கப்பல் ஒன்று காணப்பட்டதை அடுத்து, ராயல் கடற்படை அதை கண்காணித்து வருகிறது என பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார்.

ஜான் ஹீலி கூறுகையில், யந்தர் என்ற அந்தக் கப்பல், உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கும், பிரித்தானியாவின் முக்கியமான நீருக்கடியில் உள்கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வளர்ந்து வரும் ரஷ்ய அத்துமீறலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். ஜான் ஹீலி மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் உங்களைப் பார்த்துவிட்டோம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், இந்த நாட்டைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஜனாதிபதி புடின் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா யந்தரை ஒரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் என்றும், இது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஐரோப்பிய கடல் பகுதியில் இயங்கும் கப்பலைக் கண்காணித்து வருகின்றன, மேலும் கடலுக்கடியில் உள்ள கேபிள்களை உளவு பார்ப்பது அதன் பணியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மட்டுமின்றி, உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ராயல் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று யந்தருக்கு அருகில் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே ஹீலி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய கடற்படை நடவடிக்கைகளுக்கு நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் தனது பதிலை வலுப்படுத்தி வருவதாக ஹீலி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...