15 30
உலகம்செய்திகள்

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

பிரித்தானியக் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல்: புடினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இந்த வார தொடக்கத்தில் பிரித்தானியாவின் கடல் பகுதியில் ரஷ்ய உளவு கப்பல் ஒன்று காணப்பட்டதை அடுத்து, ராயல் கடற்படை அதை கண்காணித்து வருகிறது என பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார்.

ஜான் ஹீலி கூறுகையில், யந்தர் என்ற அந்தக் கப்பல், உளவுத்துறை தகவல்களைச் சேகரிப்பதற்கும், பிரித்தானியாவின் முக்கியமான நீருக்கடியில் உள்கட்டமைப்பை கண்காணிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் வளர்ந்து வரும் ரஷ்ய அத்துமீறலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என்று அவர் தெரிவித்துள்ளார். ஜான் ஹீலி மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் உங்களைப் பார்த்துவிட்டோம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், இந்த நாட்டைப் பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஜனாதிபதி புடின் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா யந்தரை ஒரு கடல்சார் ஆராய்ச்சிக் கப்பல் என்றும், இது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தால் இயக்கப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் பெரும்பாலும் ஐரோப்பிய கடல் பகுதியில் இயங்கும் கப்பலைக் கண்காணித்து வருகின்றன, மேலும் கடலுக்கடியில் உள்ள கேபிள்களை உளவு பார்ப்பது அதன் பணியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

மட்டுமின்றி, உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இந்த நடவடிக்கையை முடுக்கிவிட்டதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ராயல் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று யந்தருக்கு அருகில் கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றே ஹீலி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய கடற்படை நடவடிக்கைகளுக்கு நேட்டோ நட்பு நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் தனது பதிலை வலுப்படுத்தி வருவதாக ஹீலி தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...