12 37
உலகம்செய்திகள்

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

Share

97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு

ஆசிய நாடான இந்தோனேசியா 97 நாடுகளுக்கு e-Visa on Arrival திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா தனது புதிய e-Visa on Arrival (e-VoA) திட்டத்தால் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு பயண அனுபவத்தை எளிதாக்கியுள்ளது.

இப்போது, இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளில் இருந்து பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இதன் மூலம் பாலி (Bali) மற்றும் பிற சுற்றுலா தலங்களைக் காண பயணிகள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தோனேஷியாவின் e-VoA திட்டம் பயணிகளுக்கு முழுமையாக ஓன்லைனில் விசா விண்ணப்பத்தை முடிக்க வாய்ப்பளிக்கிறது.

இதற்கான கட்டணத்தையும் ஓன்லைனில் செலுத்தி, பயணத்திற்கு முன் விசாவை பெறலாம்.

இந்த நடவடிக்கையால் 2025-ல் 14 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள்
– இயல்பான e-VoA கட்டணம்: 500,000 IDR

– VFS Global சேவை கட்டணம்: 230,000 IDR

தேவையான ஆவணங்கள்
1. கடவுச்சீட்டு: வருகை திகதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாக இருக்க வேண்டும்.

2. புகைப்படம்: சமீபத்திய புகைப்படம்.

3. Return அல்லது Onward Ticket: பயணத்தை நிரூபிக்கும் ஆதாரம்.

விசா விண்ணப்பிக்கும் நடைமுறை
1. தகவல்களை அளிக்கவும்: VFS Global தளத்தில் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.

2. கட்டணத்தை செலுத்தவும்: ஓன்லைனில் பாதுகாப்பாக கட்டணத்தை செலுத்தவும்.

3. விசாவைப் பெறவும்: e-VoA-வை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும்.

இந்த திட்டம் 97 நாடுகளின் குடிமக்களுக்கு திறந்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் அடங்கும்.

இந்த e-VoA திட்டம், இந்தோனேசியாவிற்கு சுற்றுலா பயணிகளை எளிமையாக வரவேற்கும் வகையில் சிறந்த முயற்சியாக அமைகிறது.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...