6 46
இலங்கைசெய்திகள்

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

Share

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், ஒரு கணம் கூட அங்கு தங்குத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake), உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து வசித்தால், மாத வாடகையாக 4.6 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று கேட்டவேளை பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு எழுத்துபூர்வமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அது கிடைத்தவுடன் காலி செய்வதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றாலும், மகிந்த ராஜபக்ச ஒரு புலம்பல் செய்பவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் அரச தலைவருக்கு பொருத்தமான வீடு வாடகை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றும், அதன்படி, தான் இந்த அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

இது தொடர்பாக ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், இதன்மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான ஜனாதிபதி அநுரவின் பகிரங்க அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna rantunga), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...