16 28
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரி விதிப்பு உறுதி: டொனால்டு ட்ரம்ப் அடுத்த அதிரடி

Share

ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரி விதிப்பு உறுதி: டொனால்டு ட்ரம்ப் அடுத்த அதிரடி

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் வரிகளை விதிக்கப் போவதாக ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவிகித வரி விதிப்பது குறித்து தனது நிர்வாகம் ஆலோசித்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் ஃபெண்டானில் சீனாவிலிருந்து மெக்சிகோ மற்றும் கனடாவிற்கு அனுப்பப்படுகிறது என அவர் பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தனது முதல் பதவிக் காலத்தில் சீனா மீது ஏற்கனவே பெரிய அளவிலான வரிகளை விதித்ததாகக் கூறினார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளும் அமெரிக்காவுடன் சிக்கலான வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மிக மிக மோசமாக அமெரிக்காவிடம் செயல்படுவதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனாலையே வரி விதிக்கும் கட்டாயத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தள்ளப்படுகிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் BRICS கூட்டணி மீது 100 சதவிகித வரி உறுதி என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்தக் குழுவால் அமெரிக்கா அச்சுறுத்தப்படுவதாக அவர் உணருவதற்குக் காரணம், அது அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுதமான டொலரைப் பலவீனமாக்குகிறது என்றே அவர் நம்புகிறார்.

மட்டுமின்றி, இந்த கூட்டமைப்பானது டொலருக்கு மாற்றாக புதிய நாணயம் ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர்களாக பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.

இவர்களுடன் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் இந்தோனேசியா. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...