11 39
இலங்கைசெய்திகள்

வடக்கில் தனியாருடன் இணைந்த சேவை பிரச்சினைகளை தோற்றுவிக்கும்! எடுத்துரைக்கும் இ.போ.ச தரப்பு

Share

வடக்கில் தனியாருடன் இணைந்த சேவை பிரச்சினைகளை தோற்றுவிக்கும்! எடுத்துரைக்கும் இ.போ.ச தரப்பு

புதிய பேருந்து நிலையத்தில் தனியாருடன் இணைந்து சேவையில் ஈடுபடுவதில் தமது தொழிலாளர்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடக்குபிராந்திய முகாமையாளர் கந்தசாமி கேதீசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“கடந்த 17.01.2025 ஆம் அன்று வடக்கு மாகாண ஆளுநருடன் எமது சந்திப்பு இடம்பெற்றது.

தூர சேவை பேருந்துகள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் கடமையாற்றுமாறும் கோரப்பட்டது. அதற்கு நாங்கள் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக தான் செயற்படுவோம் என தெரிவித்திருந்தோம்.

இலங்கை போக்குவரத்து சபையினுடைய தலைவரினுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மாவட்டங்களுக்குமான இணைந்த நேர அட்டவணையை தயாரித்து எமது தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்து தூர பேருந்து சேவை நிலையத்திற்குச் சென்று பின்னர் சேவையினை தொடருமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை எமது சபை தலைவரும் உறுதிபடுத்தியுள்ளார். எங்களுக்கு எங்களுடைய பேருந்து நிலையம் போதுமானது. எமது பேருந்து நிலையத்தை கட்டித் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரவில்லை.

எமது பேருந்து வீதிகளில் தரித்து நிற்கவில்லை. எமது வளாகத்தில் தரித்து நின்றே செயலாற்றுகின்றது.10 மில்லியன் ரூபாய் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எமது பேருந்து நிலையம் சிறப்பாக அமைக்கபட்டுள்ளது.

பொதுமக்களோ பொது அமைப்புகளோ எமது நிலையத்திற்கு எதிராக எந்த முறைப்பாடும் வழங்கவில்லை.

வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது .அதில் ஒரு பகுதியையாவது பிரித்து தாருங்கள் என எமது இ.போ.ச .தொழிலாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்ற படாது உள்ளது’’ என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...