13 30
இந்தியாசெய்திகள்

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

Share

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விஜயின் மனதை பாதித்த சிறுவன் ராகுல் யார்?

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களையும், விவசாயிகளையும் சந்தித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ராகுல் என்ற சிறுவனை பற்றி பேசியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சந்திப்பதற்கு அனுமதி அளித்த காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில், கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவித்த விஜய் பேசுகையில், “உங்களுடைய போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதை கேட்டு நான் இங்கு வந்துள்ளேன்.

கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் குறித்து சிறுவன் பேசியதை கேட்டவுடன் ஏதோ செய்தது. இந்த விடயத்தில் என்னுடைய முழு ஆதரவு உங்களுக்கு உண்டு.

நாட்டிற்கு முக்கியமான உங்களை போன்ற விவசாயிகளை காலடி மண்ணை தொட்டு தான் என் பயணத்தை தொடங்குகிறேன்” என்றார்.

இதில், விஜய் குறிப்பிட்ட ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

அந்த சிறுவன் அளித்த பேட்டியில், “எங்களுக்கு விமான நிலையம் வேண்டாம். விவசாய நிலம், ஏரிகள், பள்ளிகள் மட்டுமே போதும். விமான நிலையம் வந்தால் நாங்கள் என்ன மேலேயே பறக்க போகிறோம்.

விமான நிலையம் வந்தால் பள்ளி பாதிக்கப்படுகிறது. அவங்க பசங்க மட்டும் படிக்கனுன்னு நினைக்கிறாங்க. நாங்கள் படிக்க வேண்டாமா? ஏரி இருந்தால் தான் வெயில் காலத்தில் நாங்க இங்க வந்து குளிப்போம்” என்று பேசினார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...