1 38
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் சேவை குறித்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை

Share

அரச நிறுவனங்களின் சேவை குறித்து மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை

அரசாங்கத்துக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான வா்த்தக ரீதியில் அல்லாத 166 நிறுவனங்கள் குறித்தே இவ்வாறு கருத்துக் கோரப்படவுள்ளது.

குறித்த நிறுவனங்களில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் என்பவற்றை வினைத்திறனாகவும், மேம்பட்ட முறையிலும் வழங்குவதற்காக பொதுமக்களின் இந்நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரச நிறுவனங்களில் இருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பிலும், வினைத்திறனான முறையில் அந்நிறுவனங்களை செயற்படுத்துவது தொடர்பிலும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.

அதற்காக https://pmoffice.gov.lk/soesuggestions.php இணையத்தள சுட்டியினூடாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக அரச நிறுவனங்களை மேம்பட்ட முறையில் மறுசீரமைக்க பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...