13 27
உலகம்செய்திகள்

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

Share

மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு… பாபா வங்காவைப்போல் ஒரு புதிய தீர்க்கதரிசியின் எச்சரிக்கை

பாபா வங்காவும் நாஸ்ட்ரடாமஸும் ஏற்கனவே 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் பேராபத்துக்கள் குறித்து கணித்து பலருக்கும் பயத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

இந்நிலையில், புதிதாக ஒரு தீர்க்கதரிசி மனித இனம் இதுவரை கண்டிராத பேரழிவு குறித்து எச்சரித்துள்ள செய்தி கவனம் ஈர்த்துள்ளது.

2024ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 14ஆம் திகதி, அமெரிக்காவின் ஓக்லஹாமாவைச் சேர்ந்த பாதிரியாரான பிராண்டன் டேல் பிக்ஸ் (Brandon Dale Biggs) என்பவர், யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், ட்ரம்பைக் கொல்ல ஒருவர் முயன்றதை தான் கண்டதாக தெரிவித்திருந்தார் பிராண்டன்.

’ட்ரம்ப் எழுவதைக் கண்டேன், அவரை நோக்கி ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது, அவரது தலைக்கு அருகில் வந்த அந்த குண்டு அவரது காதைத் தாக்கிவிட்டு சென்றுவிட்டது.

அவர் முழங்காலிட்டதையும், கடவுளுக்கு நன்றி சொன்னதையும் நான் பார்த்தேன்’ என்று கூறியிருந்தார் பிராண்டன்.

அப்படியே, அவர் சொன்னதுபோலவே, சில மாதங்களுக்குப் பின் பெனிசில்வேனியாவில் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்னும் நபர் ட்ரம்பை துப்பாக்கியால் சுட்டார், குண்டு ட்ரம்பின் காதைத் தொட்டுச் சென்றது!

இந்நிலையில், அமெரிக்காவில் நிகழவிருக்கும் மற்றொரு பாரிய பேரழிவு குறித்து எச்சரித்துள்ளார் பிராண்டன்.

அமெரிக்காவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று நிகழப்போவதை கடவுள் தனக்குக் காட்டியதாக தெரிவிக்கிறார் பிராண்டன்.

அமெரிக்காவை ரிக்டர் அளவில் 10 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஒன்று தாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் பிராண்டன்.

அந்த நிலநடுக்கம் மிஸ்ஸௌரி, ஆர்க்கன்சாஸ், டென்னசீ, கெண்டக்கி மற்றும் இல்லினாயிஸ் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நிலநடுக்க பகுதியில் ஏற்படும் என்று கூறியுள்ளார் பிராண்டன்.

தான் கண்ட காட்சியில், அந்த நிலநடுக்கத்தால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை 1,800 பேர் உயிரிழந்ததாகவும் கட்டிடங்கள் முழுமையாக விழுந்து நொறுங்கிப்போனதாகவும் தெரிவித்துள்ளார் பிராண்டன்.

அத்துடன், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பால், மிசிசிப்பி நதியே வேறு பாதையில் திரும்பி ஓட ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் பிராண்டன்.

ஆனால், ரிக்டர் அளவில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்கிறது அமெரிக்க நிலவியல் ஆய்வமைப்பான USGS.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...