11 29
இலங்கைசெய்திகள்

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

Share

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

மட்டக்களப்பு (Batticaloa) – களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றயதினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் பின்னர் அதனைக் கரை சேர்த்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மர்மப் பொருள் இரும்பு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடியில் 12LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பொருளின் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு மற்றும் டயர்களும் காணப்படுகின்ற நிலையில் இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...