11 29
இலங்கைசெய்திகள்

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

Share

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

மட்டக்களப்பு (Batticaloa) – களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றயதினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் பின்னர் அதனைக் கரை சேர்த்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மர்மப் பொருள் இரும்பு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடியில் 12LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பொருளின் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு மற்றும் டயர்களும் காணப்படுகின்ற நிலையில் இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...