3 31
இலங்கைசெய்திகள்

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

Share

குறைக்கப்பட்டது மின்சார கட்டணம் : வெளியானது அறிவிப்பு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இன்று (17) வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20 சதவீதத்தினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெயநாத் ஹேரத் (Jayanath Herath) தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதுடன் ஆண்டின் முதல் 06 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0 முதல் 30க்கு இடைப்பட்ட அலகு மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 29 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 31 முதல் 60 வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான கட்டணம் 28 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 91 முதல் 180 அலகு வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 18 வீத கட்டணக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 19 வீத கட்டணக் குறைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுத்துறைக்கு 11வீதம், ஹோட்டல் துறைக்கு 31 வீதம் மற்றும் தொழில்துறை துறைக்கு 30 வீத கட்டணக் குறைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத வழிபாட்டுத் தலங்களுக்கு 21வீத மின்சாரக் குறைப்பும் வழங்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

அத்துடன், தெரு விளக்குகளுக்கு 11 வீத கட்டணக் குறைப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...