18 15
இலங்கைசெய்திகள்

அரசாங்க சேவையை மறுசீரமைப்பதில் டில்வின் சில்வா தலையீடு

Share

அரசாங்க சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக அரசாங்க சேவையின் முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அண்மையில் சந்திப்பொன்றை நடத்தி, இது தொடர்பில் டில்வின் சில்வா கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் அரசாங்க சேவையின் பலம்மிக்க 18 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைத் திட்டங்களை தங்குதடையின்றி முன்னெடுக்கும் வகையில் அரசாங்க சேவையில் மறுசீரமைப்பொன்றை ஏற்படுத்துதல், முக்கிய பதவிகளில் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறித்த செயற்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக கலந்துரையாடலில் பங்கெடுத்திருந்த தொழிற்சங்கப் பிரநிதிகளும் உறுதியளித்துள்ளனர்.

அதன் பிரகாரம், எதிர்வரும் நாட்களில் அரசாங்க சேவையில் பாரிய மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை டில்வின் சில்வா வகுத்துக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...