11 22
உலகம்செய்திகள்

காட்டு தீயால் வீடுகளை இழந்த அமெரிக்க பிரபலங்கள்

Share

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்(Los Angeles) நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசிக்கும் பல பிரபலங்களின் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

நியூயோர்க் நகரத்தினை அடுத்து, அமெரிக்காவின் இரண்டாவது பிரபல நகரமான லொஸ் ஏஞ்சல்ஸ், பிரபலங்கள் வாழும் நகரமாகவும் உள்ளது.

உலகின் பிரபலமான ஹொலிவுட்(Hollywood) சின்னம், பாரமவுண்ட்(Paramount) பிக்சர்ஸ், யுனிவர்சல்(Universal) மற்றும் வோர்னர் பிரதர்ஸ்(WB) போன்ற ஸ்டுடியோக்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளன.

இந்நிலையில், குறித்த நகரில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயால் பல பிரபலங்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். கிரேஸி ஹார்ட்(Crazy Heart) திரைப்படத்தின் கதாநாயகனான ஜெஃப் பிரிட்ஜஸ்(Jeff Bridges) தனது பூர்வீக வீட்டை இழந்துள்ளார்.

சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ்(Silence of the Lambs) திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கொலையாளியாக நடித்த ஒஸ்கார் விருது வென்ற நடிகரான அந்தோனி ஹோப்கின்ஸ்(Anthony Hopkins) தனது வீட்டை இழந்துள்ளார்.

மேலும், தொலைக்காட்சி நட்சத்திரமான பரிஸ் ஹில்டன்(Paris Hilton) மலிபு(Malibu) பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் சேதமடைந்த இடிபாடுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகையான ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ்(Julia Louis-Dreyfus) தனது வீட்டை பறிகொடுத்துள்ளார்.

இதேவேளை, ப்ரேவ் ஹார்ட்(Brave Heart) மற்றும் மேட் மெக்ஸ்(Mad Max) ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மெல் கிப்சன்(Mel Gibson) பிரபல தொகுப்பாளர் ஜோ ரோகனின்(Joe Rogan) நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது அவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது.

மேலும், ஒஸ்கார் விருது வென்ற நடிகரான பில்லி கிரிஸ்டலின்(Billy Crystal) வீடு தீக்கிரையாகியுள்ளதை மிகுந்த மனவேதனையுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...