1 21
இலங்கைசெய்திகள்

தாமதமாகும் விமானங்கள்: சிறிலங்கன் எயார்லைன்ஸ் எடுத்துள்ள முடிவு

Share

இந்த ஆண்டின் முதல் பாதியில் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு (SriLankan Airlines) மூன்று புதிய விமானங்கள் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விமான குழுவில் சேர்ப்பதற்காக நிறுவனம் விமானங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது.

போதுமான விமானங்கள் இல்லாததால் விமான தாமதங்களைச் சமாளிக்க சிறிலங்கன் எயார்லைன்ஸ் தற்போது சிரமப்பட்டு வருகிறது.

2022 ஏப்ரல் மாதம் முதல் 2023 செப்டம்பர் மாதம் வரை, 548 விமானங்கள் 3 முதல் 56 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக அறிக்கையும் வெளியாகியது.

அத்தோடு, இந்த தாமதங்களை தவிர்பதற்கு ஏனைய விமான நிறுவனங்களின் உதவியைப் பெற 2023 ஆம் ஆண்டில் நிறுவனம் $784,000 செலவிட்டது.

இந்த நிலையில், போதுமான விமானங்கள் இருந்தால், மற்ற விமான சேவைகளுக்குச் செலவிட வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டிப்படுகிறது.

இவ்வாறதொரு பின்னணியில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தேவை மதிப்பீட்டின் படி, 27 விமானங்கள் தேவைப்படுகின்றன, ஆனால் தற்போது 21 மட்டுமே உள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...