15 13
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தி தேசிய மொழி அல்ல.., கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சுக்கு அதிர்ந்த அரங்கம்

Share

இந்தி தேசிய மொழி இல்லை என்றும் அது அலுவல் மொழி மட்டும் தான் என்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளை புரிந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் கலந்து கொண்டார்.

அப்போது, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ” தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்ட போது தமிழுக்கு மட்டும் மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

அப்போது, மாணவர்கள் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று” கூறினார். இதனை கேட்ட மாணவர்கள் மீண்டும் சத்தத்தை எழுப்பினர்.

Share
தொடர்புடையது
world 220
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணி இடைநிறுத்தம்: விகாராதிபதியின் முறைப்பாடும் காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டும்!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை அளவீடு செய்யும் பணிகள் இன்று (ஏப்ரல் 17,...

world 219
உலகம்செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவத் தளபதி கடும் எச்சரிக்கை: கல்லறைக்கே செல்வார்கள்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க...

world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...