19 10
இலங்கைசெய்திகள்

யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து: ஒருவர் பலி…சாரதி தலைமறைவு

Share

யாழ்ப்பாணம் (Jaffna) – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூரிலிருந்து – சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் பலாலியிலிருந்து ஏழாலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 60 வயதான சங்கரப்பிள்ளை ஜெய்சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...