17 10
இந்தியாஉலகம்செய்திகள்

பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை

Share

பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தை ஈ.வெ.ரா பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீமானை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை பேசுகையில், “பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு ஆதாரங்களை நான் வெளியிடுகிறேன். அவர், எப்போது எங்கு பேசினார் என்று ஆதாரங்களை வெளியிடுகிறேன். அவர் பேசியதை பொதுவெளியில் கூறினால் நாகரீகமாக இருக்காது.

யுஜிசி புதிய விதி குறித்து நகலை வழங்கியுள்ளோம். நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...