இலங்கைசெய்திகள்

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

Share
25 677b7d1e1efc2
Share

பரீட்சைக்கு முன்னரே வெளியான வினாத்தாள் : இடை நிறுத்தப்பட்ட பரீட்சைகள்

வட மத்திய மாகாணத்தின் 11ஆம் தர சிங்கள இலக்கிய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே வெளியாகியுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

இந்த வினாத்தாள் நேற்று (05.01.2025) நள்ளிரவு சமூக ஊடகங்கள் ஊடாக வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன் காரணமாக இன்றைய தினம் (06.01.2025) நடைபெறவிருந்த பரீட்சை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள் காவல்துறையில் முறைப்பாடு ஒன்றையும் பதிவுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி இதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் மாகாண கல்விச் செயலாளர் சிறிமெவன் தர்மசேன வலியுறுத்தியுள்ளார்.

மேலும் விரைவில் குறித்த பாடத்திற்கான பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சிறிமெவன் தர்மசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...