2 4
இலங்கைசெய்திகள்

அநுர அரசுக்கு பயமில்லை! வளங்களுக்காக போராடுவோம் – யாழ் கடற்றொழிலாளர்கள் பகிரங்கம்

Share

அநுர அரசுக்கு பயமில்லை! வளங்களுக்காக போராடுவோம் – யாழ் கடற்றொழிலாளர்கள் பகிரங்கம்

புதிய அரசாங்கம் எங்களை தண்ணீர் கொண்டு அடித்தாலும் கட்டை கொண்டு அடித்தாலும் நாங்கள் பயப்படாமல், எமது வளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக போராட்டம் செய்வோம் என யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் அந்தோனிப்பிள்ளை பிரான்ஸிஸ் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் இந்தியாவின் இழுவைப் படகுகளை கட்டாயப்படுத்தி நாங்கள் ஓரளவு தொழில் செய்துகொண்டு இருந்தோம்.

ஆனால் புதிய அரசாங்கம் வந்த பின்னர் நிறைய இழுவைமடி படகுகள் எங்களது வளங்களை அழிக்கின்றது. ஆகையால் எமது தொழிலாளிகளின் வலைகளும் இல்லாமல் போகின்றன.

புதிதாக பதவியேற்றுள்ள கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் அவர்களுக்கு நாங்கள் இதனை புதிதாக சொல்லவேண்டிய அவசியமில்லை.

கடந்த காலத்தில் நாங்கள் போராட்டத்தை நடாத்தியபோது, இந்திய இழுவைப் படகுகள் குறித்து தமது தலைவருக்கு உடனடியாக தெரியப்படுத்துவோம், நடவடிக்கை எடுப்போம் என தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் புதிதாக பதவியேற்ற பின்னர் இந்த இழுவை படகுகளை நிறுத்துமாறு எமது சம்மேளனம் சார்பாக நாங்கள் பல கோரிக்கை கடிதங்களை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்துள்ளோம்.

இருப்பினும் நெடுந்தீவு தொடக்கம் சுண்டிகுளம் வரையிலான கடற் பகுதியில் இந்திய இழுவை படகுகள் எமது வளங்களை அளிக்கின்றன.

இவற்றினை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஜனாதிபதியும் கடற்தொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவினை எடுக்காவிட்டால், யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் செய்யும் மக்களை இணைத்து நாங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை செய்வோம்.

இப்பொழுது புதிய அரசாங்கம் ஒன்று வந்திருக்கின்றது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றபோது தண்ணியால் அடிப்பார்கள், கட்டையால் அடிப்பார்கள் அவற்றையெல்லாம் பற்றி எங்களுக்கு பயமில்லை.

எங்களது பிரச்சினை தீர வேண்டும் என்றால் நாங்கள் போராட்டம் செய்வோம். எனவே ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் இதற்கு ஒரு சரியான முடிவு கூற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...