19 2
இந்தியாஉலகம்செய்திகள்

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

Share

மதுரையில் வைத்து குஷ்புவை கைது செய்த பொலிஸார்

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தி வருகின்றனர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார்.

குஷ்பு பேசுகையில், “இந்த பேரணிக்கு திமுக அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. திமுக ஆட்சிக்கு எதிராக யார் போராட்டம், பேரணி நடத்தினாலும் எங்களுக்கு அனுமதி கொடுப்பதே இல்லை.

அதற்கு காரணம் என்னவென்றால் நாங்கள் உண்மையை பேசுவோம் என்று திமுகவுக்கு தெரியும். அதனால் தான் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

கண்ணகி பிறந்த தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நாங்கள் பேசுவதை மக்கள் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள்” என்றார்.

இதையடுத்து, தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...