15 3
இந்தியாஉலகம்செய்திகள்

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

Share

100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா?

அம்பானியின் செல்வம், திகைப்பூட்டும் வாழ்க்கை, நீதா அம்பானியின் சொகுசு வாழ்க்கை, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் போன்றவை அதிகம் பேசப்பட்டு வரும்.

அம்பானி குடும்பத்தின் விருந்துகள் மற்றும் அவர்களின் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் நிறைய செய்திகள் வெளியாகும்.

இன்று முகேஷ் அம்பானி தனது வீட்டில் ‘ஆண்டிலியா’விலும், அனில் அம்பானி ‘அபோட்’விலும் வசிக்கின்றனர்.

தற்போது கோடிக்கணக்கில் பல கோடி மதிப்புள்ள வீடுகளில் வசிக்கும் முகேஷும், அனில் அம்பானியும் சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

ஒரு அறை வீட்டில் 7 பேர் கொண்ட குடும்பம், 100 பேருக்கு ஒரு கழிப்பறை. 500 பேர் கொண்ட குடியிருப்பில் நீண்ட வரிசையில் தண்ணீருக்காக காத்திருந்தனர்.

மும்பையின் சால் வாழ்க்கையை நீங்கள் படங்களில் பார்த்திருக்கலாம், ஆனால் அம்பானி சகோதரர்கள் அந்த வாழ்க்கையை பல ஆண்டுகளாக வாழ்ந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஒன்றில் அனில் அம்பானி தனது குழந்தைப் பருவ நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அது 1959 ஆம் ஆண்டு, திருபாய் அம்பானி ஏமனில் இருந்து பெட்ரோல் பம்ப் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்தார்.

அம்பானியின் குடும்பம் குஜராத்தில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்தது. வருமானமும் இல்லை. திருபாய் அம்பானி மசாலா விற்று குடும்பத்தை நடத்தி வந்தார்.

இவர் மும்பையின் பின்தங்கிய பகுதியில் உள்ள கபூதர் கானா பகுதியில் வசித்து வந்தார். அந்த பகுதியில் ஜெய் ஹிந்த் எஸ்டேட் என்ற பெயரில் ஒரு சால் இருந்தது.

அங்கு ஒரு கட்டிடத்தில் 500 இற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர், அதே கட்டிடத்தின் நான்காவது மாடியில் அம்பானி குடும்பம் வசித்து வந்தது.

இங்கு அதிக அளவில் புறாக்கள் இருந்ததால் இந்தப் பகுதிக்கு கபூதர் கானா என்று பெயர் சூட்டப்பட்டது. மக்கள் புறாக்களுக்கு உணவளித்தனர், இதனால் இங்கு புறாக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சால்லின் நான்காவது மாடியில் 1 அறை மற்றும் 1 சமையலறை கொண்ட வீட்டில் 7 பேர் கொண்ட அம்பானியின் குடும்பம் வசித்து வந்தது.

வீட்டில் பொதுவான குளியலறை கூட இல்லை. 100 பேருக்கு பொதுவான குளியலறை இருந்தது. குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரிதளவில்உடைகள் கூட இல்லை. முகேஷும், அனில் அம்பானியும் மாறி மாறி உடை அணிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

அனில் அம்பானி தனது குழந்தை பருவத்தில் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமைக்காக முழு குடும்பமும் ஆவலுடன் காத்திருக்கும்.

முகேஷ் மற்றும் அனில் அம்பானி ஞாயிற்றுக்கிழமைகளில் கால்பந்து விளையாடுவார்கள். திருபாய் அம்பானி தனது குழந்தைகளுடன் உணவகத்திற்குச் செல்வது வழக்கம், அங்கு இட்லி-சாம்பார் சாப்பிடுவார்களாம்.

திருபாய் அம்பானியின் கடின உழைப்பாலும் திறமையாலும் உருவானதுதான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

இதன் மூலம் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் பல பில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வாரிசாகப் பெற்றனர்.

இன்று முகேஷ் அம்பானிக்கு ரூ.15,000 கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய வீடுகளில் ஒன்றான ஆண்டிலியா உள்ளது, அனில் அம்பானி தனது குடும்பத்துடன் ரூ.5,000 கோடி மதிப்புள்ள அபோட் என்ற வீட்டில் வசிக்கிறார்.

இருவரும் பல ஆடம்பரப் பொருட்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் வறுமையையும் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...