12 2
இந்தியாஉலகம்செய்திகள்

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

Share

குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான்

குளிர்பானம் விஷம் என்றால் அதன் தயாரிப்பை தடை செய்யுங்கள் என்று நடிகர் ஷாருக்கான் பேசிய கருத்து பகிரப்பட்டு வருகிறது.

குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் அதனை குடிப்பதை யாரும் நிறுத்துவதில்லை.

அதே நேரம் குளிர்பான விளம்பரத்தில் நடிகர்கள் நடித்தால் அதற்கு விமர்சனங்கள் ஏற்படுகிறது. இந்த விமர்சனங்களுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் பேசியுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கரண் தாப்பர் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளருடன் இது தொடர்பான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அவர் பேசுகையில், “குளிர்பானங்கள் குழந்தைகளுக்கு மோசமானது என்று நீங்கள் நினைத்தால், அதை தடை செய்யுங்கள். நம் நாட்டில் விற்க வேண்டாம். புகைபிடித்தல் மோசமானது என்றால் சிகரெட் உற்பத்தியை தொடர விடாதீர்கள்.

குளிர் பானங்கள் மோசமானவை என்று நீங்கள் நினைத்தால், அவற்றை அனுமதிக்காதீர்கள். இது நம் மக்களுக்கு விஷம் என்றால், அதை இந்தியாவில் தயாரிக்க விடாதீர்கள்.

உங்களுக்கு வருமானத்தை அளிக்கிறது என்ற காரணத்தால் அதனை நிறுத்தமாட்டீர்கள். சில தயாரிப்புகள் தீங்கு விளைவிப்பதாக நீங்கள் நினைத்தால் ஏன் நிறுத்தவில்லை, ஏனென்றால், அவை அரசாங்கத்திற்கு வருவாய்.

ஆனால், என் வருவாயை நிறுத்தாதீர்கள். நான் ஒரு நடிகர். நான் ஒரு வேலையைச் செய்து அதன் மூலம் வருமானம் பெற வேண்டும். ஏதாவது தவறு இருப்பதாக நீங்கள் நினைத்தால், அதை நிறுத்துங்கள். எந்த பிரச்சனையும் இல்லை.

புகைப்பிடிப்பதால் மிகப்பெரிய சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே, மக்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சினிமாவில் நடிகர்கள் புகைப்பிடிப்பதை பார்த்து புகைப்பிடிக்கக்கூடாது என்பது மக்களுக்குத் தெரியும்.

படங்களில் புகைபிடிப்பதை விட மிகப்பெரிதாக இருக்கும் சுகாதாரப்பிரச்னையை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...