1 4
இலங்கைசெய்திகள்

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

Share

மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர் : ஆரம்பமானது விசாரணை

அநுராதபுரம்(anuradhapura) கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கணித பாட அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் நடத்த உத்தேசிக்கப்பட்ட கணித பாட முகாமை நடத்தாமல் போலியானஆவணங்களை சமர்ப்பித்து 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகையை முறைகேடாக பயன்படுத்திய அனுராதபுரம் பிராந்திய பெண் கல்வி பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகர ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளார்.

இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித முகாம்களை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.

எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித முகாம்கள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித முகாம்கள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடு செய்தமை பாரிய தவறு என வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதம செயலாளர் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணித முகாமை நடத்துவதற்கு தேவையான பணித்தாள்களை அச்சடித்ததாக போலி பில்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த கணித முகாம்களை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...