8 2
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கான உர நிவாரணம் குறித்து வெளியான அறிவிப்பு

Share

விவசாயிகளுக்கான உர நிவாரணம் குறித்து வெளியான அறிவிப்பு

உர நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கு இந்த வாரத்திற்குள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை விவசாயம் மற்றும் கால்நடை வளத்துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடுத்த பெரும்போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதியமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்வரும் நாட்களில் நெல்லுக்கான புதிய உத்தரவாத விலை அறிவிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பதாக நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான உர நிவாரணம் குறித்து வெளியான அறிவிப்பு | Action To Provide Fertilizer Relief To Farmers Sl

இதேவேளை, சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் என அரச வாணிப கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 10, 400 மெற்றிக் தொன் அரிசி கொள்வனவானது எதிர்வரும் வாரம் இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சந்தையில் நிலவும் அரிசி தட்டப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 2 1
இலங்கைசெய்திகள்

யாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – தமிழ்த் தேசிய கூட்டணி சந்திப்பு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பொன்று யாழில் இடம்பெற்றுள்ளது....

25 683c8c39bbd50
இலங்கைசெய்திகள்

குடிவரவு கொள்கைகளை விரைவில் திருத்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

தற்போதுள்ள, குடிவரவு சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். இந்தியாவில்...

image a23900d6f4 920x425 1
இலங்கைசெய்திகள்

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சியின் பிரதேச சபைகளில் உறுப்பினர்கள் சத்தியபிரமாணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்...

25 683cfd13e6c54
இலங்கைசெய்திகள்

நைஜீரியாவில் பேருந்து விபத்து: 22 விளையாட்டு வீரர்கள் பலி

நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கானோவின் பாலம் ஒன்றில் இருந்து பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 22...