13 33
இலங்கைசெய்திகள்

161 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்

Share

161 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கப்பட்ட பயணிகள் விமானம்

தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் அவசாமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று, தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில், ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.

ஜெஜூ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணி நேரத்திற்கு முன்னரே ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் பதிவான சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது.

இதேவேளை நோர்வே (Norway) ஒஸ்லோவில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் விமானமே நோர்வேயில் உள்ள டார்ப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டார்ப் விமான நிலையத்தில் (Torp Airport) அவசரமாக தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் இருந்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...