10 41
இலங்கைசெய்திகள்

உப்புப் பற்றாக்குறை தொடர்பான வதந்தி : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

உப்புப் பற்றாக்குறை தொடர்பான வதந்தி : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் உப்புப் பற்றாக்குறை குறித்த வதந்திகளை தவிர்க்குமாறு, ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி.நந்தனதிலக்க பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய உப்பு விநியோகம் நாட்டின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு சராசரி குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு 400 கிராம் சிறிய பொதிகள் மற்றும் ஒரு கிலோகிராம் படிக உப்பு போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே பற்றாக்குறை வதந்திகளை நம்பி தேவையற்ற முறையில் உப்பை சேமித்து வைப்பது தேவையற்றது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தில் தற்போது 6,000 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளது என்றும், இது ஜனவரி வரை நீடிக்கும் என்றும் தலைவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

அத்துடன், எந்தவொரு பற்றாக்குறையையும் தடுக்க 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்யத் திட்டங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாண உப்பளங்கள் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டதே தற்போதைய நிலைக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த ஆண்டு உப்பு உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உப்பளங்களை மறுசீரமைத்து உற்பத்திக்குப் பயன்படுத்த எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தநிலையில், யாழ்ப்பாண உப்பளங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் ஜனவரி நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்றும், மார்ச் 2025இற்குள் உற்பத்தி ஆரம்பிக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...