4 54
உலகம்செய்திகள்

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Share

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டொக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.

அத்தோடு, மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் சாயர் அமெரிக்க உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தாம் பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...