4 54
உலகம்செய்திகள்

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

Share

டிக்டொக் செயலி தொடர்பில் ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை

அமெரிக்காவின் (United States) புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அந்த நாட்டில் டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மேலும் கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டொக் செயலி உதவியாக இருந்திருக்கலாம்.

அத்தோடு, மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்ப் சார்பில் அமெரிக்க அரசின் புதிய சொலிசிட்டர் ஜெனரல் ஜோன் சாயர் அமெரிக்க உயர் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், டிக்டொக் செயலியை தடை செய்யும் உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான தாம் பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...