15 29
இலங்கைசெய்திகள்

விமான விபத்து எதிரொலி : ரஷ்யாவிற்கான விமான போக்குவரத்து நிறுத்தம்

Share

விமான விபத்து எதிரொலி : ரஷ்யாவிற்கான விமான போக்குவரத்து நிறுத்தம்

ரஷ்யாவை(russia) நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, அந்த நாட்டின் பல்வேறு நகரங்களுக்கான தங்கள் விமானப் போக்குவரத்தை அஜா்பைஜான் ஏா்லைன்ஸ்(Azerbaijan Airlines) நிறுத்திவைத்துள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வான்பாதுகாப்பு ஏவுகணைத் தாக்குதலில்தான் அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அஜா்பைஜான் ஏா்லைன்ஸுக்குச் சொந்தமான எம்ப்ரயா்-190 ஏஆா் விமானம் தலைநகா் பாக்கூவில் இருந்து 67 பேருடன் ரஷ்யாவின் கிரோஸ்னி நகரை நோக்கி கடந்த புதன்கிழமை புறப்பட்டது.கஜகஸ்தானில் உள்ள அக்தெள நகர விமான நிலை அது பறந்துகொண்டிருந்தபோது அதை அவசரமாக தரையிறக்க விமானிகள் முயன்றனா்.

ஆனால், தரையிறங்குவதற்கு முன்னரே அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்தது. இதில் 38 போ் உயிரிழந்தனா்; எஞ்சிய 29 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

பறவைகள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டாலும், உக்ரைனின் ட்ரோன் என தவறாகக் கருதி ரஷ்யாவின் வான்பாதுகாப்பு தளவாடம் மூலம் அது இடைமறித்து தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தச் சூழலில், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய நகரங்களுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்திவைக்கப்படுவதாக அஜா்பைஜான் ஏா்லைன்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...