14 25
இலங்கைசெய்திகள்

டில்வின் சில்வாவால் கட்சி உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

Share

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, தனது அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார(Nalin Bandara)தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவை “வைத்தியர்” என அடையாளப்படுத்திய நாடாளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பிழையான தகவல்கள், சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்கவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் அரசாங்கத்தின் கூற்றுக்கள் நாடாளுமன்ற அதிகாரிகளை மையப்படுத்திய சதித்திட்டத்தை முன்வைத்துள்ளது.

இதை அவர்கள் நாடாளுமன்ற அதிகாரிகளின் சதி என்று சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் அந்த ஆவணம் அவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

இப்போது என்ன சொல்வார்கள்?” இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பிலான விடயத்தை தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நாணயக்காரவை அழைத்திருந்தேன்.

நீதியமைச்சர் தனது கோரிக்கைகளை நிராகரித்துள்ளார். அவருக்கு கருத்து தெரிவிக்க கட்சியின் அனுமதி தேவை.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin-Silva), தனது அனுமதியின்றி ஊடகங்கள் முன் தோன்ற கட்சி உறுப்பினர்களுக்கு தடை விதித்துள்ளார்’’ என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...