9 27
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

Share

இலங்கையில் 19 பேரை கொலை செய்ய திட்டம் : வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் அடுத்த வரும் சில நாட்களில் 19 கொலைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சதி நடவடிக்கை இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள பாதாள உலகக் கும்பல்களால் திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் இரகசிய அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாதாள உலகக் குழுக்களிடையே நடத்தப்படும் இந்த கொலை அலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மேற்கு தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அண்மையில் அறிவித்துள்ளார்.

இவ்வாறு இனங்காணப்பட்ட பாதாள உலக கொலைக் கும்பல்கள் தமக்கு இலக்கானவர்கள் மற்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் வெளிநாட்டு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பான இரகசிய புலனாய்வு அறிக்கையை உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் படுகொலை இலக்குகள் தொடர்பிலும் பாதாள உலகக் குழு தொடர்பிலும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அமைப்பின் தலைவர் ஒருவரை பழிவாங்கும் வகையில் அவரது சகோதரரைக் கொலை செய்ய முயற்சித்தமையும் தெரியவந்துள்ளது.

கஞ்சிபானி இம்ரான், குடுலால், அஹுங்கல்லே லொகு பெட்டி, அஹுங்கல்லே பொடி பெட்டி, கொஸ்கொட சுஜீ, கரந்தெனிய சுத்தா, மட்டக்குளியே ரொஷான், ரத்கம விதுர, பிரான்ஸின் ஆனந்த, படோவிட்ட அசங்க, கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட பாதாள உலகக் குழுக்களின் போதைப்பொருள் மற்றும் அதிகாரம் தொடர்பான கருத்து மோதல்கள் காரணமாகவே இந்த கொலைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...