9 24
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

Share

மற்றுமொரு அரசியல் தரப்புக்கு அநுர அரசாங்கத்தால் காத்திருக்கும் அதிர்ச்சி

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் முன்வைத்தேன்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் அவ்வாறு செய்த அரசியல்வாதிகள் அதிகம். இன்னும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

சில பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஆகியோரும் இந்த நிதியில் பணம் பெற்றுள்ளனர்.விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவேன்.”என்றார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...