22 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல்

Share

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்ற எம்.பிக்கள் : வெளியான பெயர் பட்டியல்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்தின் பிரதான நோக்கத்திற்கு அப்பாற்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவியை பெற்றுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) குறிப்பிட்டுள்ளார்.

வறிய மற்றும் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவளிப்பதை மையமாகக் கொண்டு இந்நிதியை பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான பெயர் பட்டியல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபா ஐப் பெற்றுள்ளதுடன், ராஜித சேனாரத்னவுக்கு பத்து மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அலெக் அலுவிஹாரே 2.2 மில்லியன் ரூபா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் ரஞ்சித் அலுவிஹாரே 4.6 மில்லியன் ரூபா நிதியையும் பெற்றுள்ளனர்.

முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்னவுக்கு 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது அத்தோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித் சொய்சா 18 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதுடன், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா 2.7 மில்லியன் ரூபா நிதியைப் பெற்றுள்ளார்.

ஜோன் அமரதுங்க நான்கு மில்லியன் ரூபா , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மூன்று மில்லியன் ரூபா மற்றும் விதுர விக்கிரமநாயக்க 1.5 மில்லியன் ரூபாவையும் பெற்றுள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மனோஜ் சிறிசேன , தயாசிறி ஜயசேகர , பி.ஹரிசன் , பி.தயாரத்ன , மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா மற்றும் பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்த நிதியில் இருந்து அண்மைய ஆண்டுகளில் உதவிகளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...